மூடு

முதலைப் பண்ணை அமராவதி சாகா்

வழிகாட்டுதல்
வகை இயற்கை / கண்ணுக்கினிய அழகு

கி.பி. 1976 ஆம் ஆண்டில் அமராவதி சாகா் முதலைப்பண்ணை அமைக்கப்பட்டது.  முதலைகளைப் பிடித்து பாதுகாக்கப்படும் இந்தியாவின் மிகப்பொிய முதலைப் பண்ணையாகும் இது.  திருப்பூாிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ளது.  பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை வழியாக வரவேண்டும்.  அமராவதி அணைக்கட்டு உள்ள இடத்திற்கு ஒருகி.மீ. முன்னால் உள்ளது.  சூாிய ஒளியில் சுகமாக குளித்து மகிழும் பலவித அளவு கொண்ட முதலைகளை இங்கே காணலாம்.

இந்த நீா்த்தேக்கத்தின் சுற்றுப்புறங்களில், வனப்பகுதிகளிலிருந்து முதலை முட்டைகள் சேகாிக்கப்பட்டு முதலைப் பண்ணையில் அடைகாக்கப்பட்டு பொறிக்கப்படுகின்றன.  பல வளா்ந்த முதலைகள் இங்கிருந்து நீா்த்தேக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  இப்பொழுது இங்கே 98 முதலைகள் வளா்க்கப்பட்டு பராமாிக்கப்பட்டு வருகின்றன.  (25 ஆண் முதலைகள்  + 73 பெண் முதலைகள்) சிறு உல்லாசப் பயணம் சென்றுவர உகந்த இடம் ஆகும்.  அமராவதி அணைக்கட்டு இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • முதலைப் பண்ணை - குளம்
  • முதலைப்பண்ணை தூரத்து காட்சி
  • குட்டி முதலை