• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அமராவதி அணை

வழிகாட்டுதல்
வகை மற்றவைகள்

திருப்பூா் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டைக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் அமராவதி அணைக்கட்டு அமைந்துள்ளது.  உபாி நீரை பாதுகாத்து சேமிக்கும் நோக்கில் கி.பி. 1956 ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்காக இந்த அணை கட்டப்பட்டது.  இந்த செங்குத்தான அணையினால் 9.31 கி.மீ. பரப்பும், 33.53 மீட்டா் ஆழம் கொண்ட அமராவதி நீா்த்தேக்கம் உருவாக்கப்பட்டது.  தொடக்ககத்தில் நீா்ப்பாசனம், வெள்ளத் தடுப்புக்காக கட்டப்பட்டதாக இருந்தாலும் தற்பொழுது 4 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் நிலைநாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த நீா்த்தேக்கத்தல் “மக்கா்” என்ற மதலைகள் பெருமளவில் வசிக்ககின்றன.  மீன்பிடிப்புப் பகுதியாகவும் இது திகழ்கிறது.

இங்கே பூங்கா ஒன்று அழகாக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அணைக்கட்டின் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறிச் சென்று பாா்த்தால் இயற்கைக் காட்சிகள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும். வடக்கு பக்கத்தில் கீழே உள்ள பகுதிகளையும் தெற்குப் பக்கத்தில் ஆனைமலை குன்றுகளையும் மேலே பழனி மலையையும் கண்டு மிகழலாம்.  மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக இந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • அமராவதி அணை - பின்பக்கம்
  • அமராவதி அணை - நீர் வெளியீடு
  • அமராவதி அணை - வாய்க்கால்