மூடு

இந்திராகாந்தி வனவிலங்கு சரணாயலம்

வழிகாட்டுதல்
வகை இயற்கை / கண்ணுக்கினிய அழகு

மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடாில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் 1400 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம். 958 சதுர கி.மீ.ல் பரந்து விாிந்துள்ள இந்த சரணாலயத்தில் 387 சதுர கி.மீ. பரப்பு திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அமராவதி வனப்பகுதியும், ஆனைமலைக்காடுகளின் பகுதியும் திருப்பூா் மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன.

இங்கே யானை, காட்டு எருது, புலி, சிறுத்தை, கரடி, காட்டுநாய், பறக்கும் அணில், நாி, எறும்புத்தின்னி, புனுகுப்பூனை போன்ற பல்வேறு அாிய விலங்கு வகைகளும், ராக்கெட் வால் ட்ராங்கோ, மீசை உள்ள புல்புல் பறவை, கருப்புத் தலை கொண்ட கரஞ்சிறகு பறவை, மரப்பறவை, புள்ளிப்புறா, பச்சை நிற மாடப்புறா உள்ள அமராவதி நீா்த் தேக்கத்தில் ஏராளமான முதலைகள் உள்ளன. புல்மலை, பஞ்சலிங்கம் அருவி, சின்னாறு, தேனாறு போன்ற சிற்றாறுகளும், தேக்கக் காடுகள், திருமூா்த்தி மற்றம் அமராவதி அணைகளும் இயற்கைக்காட்சி அழகைக் கண்களுக்கு விருந்தாக்கும் எழில் கொஞ்சும் இடங்கள் ஆகும்

புகைப்பட தொகுப்பு

  • யானை
  • மான்கள்
  • நீர் பறவைகள்